Category: மயல்
-
யக்ஷிகளை எழுப்புதல்
கடந்த வாரயிறுதியில் Vasteras தமிழ்ச் சங்கத்திற்காகப் புனைவெழுத்து பற்றிய சிறிய உரையாற்றியிருந்தேன். அதில் மொழி, கட்டமைப்பு, கற்பனை என்னும் மூன்று முக்கியக்கூறுகளைப் பற்றி விளக்கினேன். தஞ்சை பெரிய கோவிலுக்கு ஒரு சாதாரணன் செல்வது வேறு. அதன் வரலாறு, தொன்மம், சிற்பம், தத்துவம், கட்டடக்கலை ஆகியவற்றை அறிந்து செல்பவன் வேறு. இவை யாவையும் அறிந்த பின்னர் அதன் மீது தன் கற்பனையை ஏற்றி அனுபவிப்பவன் வேறு என்று ஓர் உதாரணம் கொண்டு கற்பனையைப் பற்றி விளக்கினேன். இந்த உரையைக்…
-
மயல் – முன்னோட்டம்
என்னுடைய முதல் நாவல் ‘மயல்’ , வெகு விரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்கென தயாரிக்கப்பட்ட டீசர் இது. சென்ற மாதம் விமரிசையாக நடந்த ஓர் இணைய நிகழ்வில் பதிப்பாளர்கள், ஸீரோ டிகிரி ராம்ஜி மற்றும் காயத்ரி ஆகியோர் இதனை வெளியிட்டனர். ஆசிரியர் பா.ரா தலைமையில் நடந்த விழாவில், ஊடகவியலாளர் ஆர்.வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரளான வாசகர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். டீசர் உங்கள் பார்வைக்கு இங்கே.
-
மயல் மலர்ந்த காதை – 2
நாவலின் கருவும், களமும் உருவான பிறகு, ஆசிரியருக்கு அனுப்பிய ஒலிக்குறிப்பை என் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினேன். வாசிப்பிலும், எழுத்திலும் சிறந்த என் நெருங்கிய வட்டம் அது. இதைக்கேட்டதும் பதறினார்கள். இந்த நாவலில் காமம் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் இருந்தது. அது சரியாக வருமா என்று அஞ்சினார்கள். அதற்கு முன்பு நான் எழுதத் தொடங்கிய கிளாசிக் நாவல் எனக்கு எழுத்துவட்டத்தில் மிகச்சிறந்த அறிமுகத்தை எனக்கு வழங்கும் என்று நம்பியிருந்தார்கள். முதலில் வரும் நாவலாக இதுவா அமைய வேண்டும்…
-
மயல் மலர்ந்த காதை – 1
இந்த வருடம் வேறு ஒரு பெரிய நாவலைத் திட்டமிட்டருந்தேன். பெரிய கேன்வாஸில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஃபேண்டஸி ஃபிக்ஷன் கதையாக அது இருந்தது. அதைப் பற்றி ஆசிரியரிடம் பேசி, விவாதித்து, எழுதவும் தொடங்கினேன். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றை எழுதிக்கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு அவர் நேரில் அழைத்தார். ‘இதை தமிழகத்தில் வேறு எந்த பத்திரிகை ஆசிரியரிடம் கொடுத்தாலும் உடனே பிரசுரம் செய்வார். சம்பவங்கள், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் நன்கு வந்திருக்கிறது. ஆனால் இந்த நாவலை மொழியால் இன்னும்…
-
முதற்சொல்
ஜேம்ஸ் பேட்டர்சன் தன்னுடைய எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் ‘முதல் வரிகள்’ என்று ஒரு தனி அத்தியாயமே வைத்திருப்பார். எப்படி முதல் வரியிலிருந்தே கதைக்குள் வாசகனை இழுத்துச்செல்ல வேண்டும் என்று விரிவாக அதில் விளக்குவார். (அபிநயங்களோடு அவர் வகுப்பெடுப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்) வாசகனுக்கு மட்டுமல்ல இந்த முதல் வரியும் முதற்சொல்லும் வந்து சேருவது ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே மிக முக்கியமான தருணம். அது வந்துவிட்டபிறகு மனிதனாக இருக்கும் அவன் கலைஞன் என்ற சிறகுகள் அணிவிக்கப்படுகிறான். பின்பு அவன் செல்லும்…
