Category: நீலகிரி
-
நீலமலை ரகசியம் – நிறைவு
மெட்ராஸ் பேப்பரில் தொடராக எழுதி வந்த ‘நீலமலை ரகசியம்’ இன்றோடு (பிப்ரவரி 10, 2026) நிறைவுபெறுகிறது. நீலகிரியின் வரலாற்றை ஐந்து வயதிலிருந்து கதைகளாகக் கேட்கத் தொடங்கினேன். படுகஹள்ளியிலிருந்து, துருக்க மகாராஜாவால் விரட்டப்பட்டு ஹெத்தையம்மன் நீலகிரிக்கு நுழைந்த கதையைச் சொல்லித் தூங்க வைத்திருக்கிறார்கள். பவர் ஹவுஸுக்குச் செல்லும்போது எப்படி ஐந்து மின் நிலையங்களும் ஆழ் வெளியைத் தாண்டி, மலைகளைக் குடைந்து, ஆறுகளை மடைமாற்றி உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று வரைபடம் காட்டி விளக்குவார்கள். அதனைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் ஆரம்பம் ஒரே ஒரு…
-
டைனோசர் காலத்துத் தவளை
வருடம் முழுதும் நீருக்குள் வாழும். எங்கோ வெகு தொலைவில், மனிதர் அறியாத ஆழத்தில், எளிதில் கண்டறிந்துவிட முடியாத மர்மக்கூட்டில் வசிக்கும். தென்மேற்கு பருவமழைக்காலம் வரும்போது சில மணி நேரங்கள் மட்டும் வெளியே வந்து மழையை ரசித்து அனுபவித்துவிட்டு மீண்டும் உள்நுழைந்து புகுந்து கொள்ளும். தவளையின் சாயலும் குரலும். நத்தையளவு உடலும் கொண்டு மீச்சிறு உருவமாய் ஊர்ந்து வரும் இது bhupathi’s purple frog என்று அழைக்கப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் காணக்கிடைக்கும். அது அனுமதித்தால் மட்டும்…
