Category: கவிதை
-
பலே!
முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
-
ஒரு இல்லமும் சில இன்னல்களும்
எப்போதும் மிதந்து சென்று கொண்டே இருக்கின்றன எனக்காக நகரின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கின்ற அறையின் சுவடுகள் யாவும்
-
சுயங்களின் வலிகள்
வெளிச் சொல்லமுடியாத வெக்கைகளின் வெளிகளில் பற்றியெறிகின்றன என் பச்சை தாவரங்கள் சுயங்களின் முனை முறிவுகளில் தடவப்பட்ட பிரியக்களிம்புகள் என்றென்றும் ஆற்றுவதில்லை புரையோடிப்போன மனக்காயங்களை இருள் நிறைந்த பாதைபோல ஒளியற்றுப்போகிறது வாழ்க்கை சில நேரங்களில் ஆங்கே ஒட்ட வைத்த மெழுகு போல உன் பிரியங்கள் அவ்வப்போது என்னை ஆற்றுமாயினும் வழியற்றுத் திரிகின்றன என் விழிப் பட்டாம்பூச்சிகள் காலங்களின் வழிதெரியா ஒற்றையடிப்பாதையின் வழியே வழிந்தோடிக்கொண்டிருக்கிறது என் பிரியங்களின் ஆழ்நதி என்றேனும் ஒருநாள் கரையேருமென்ற நம்பிக்கையில்…
