Category: சினிமா
-
வனப்பிரஸ்தம்(1999)
மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று வரையிலும். ராஜராஜசோழன் மீதான எனது அபிமானங்கள் அவன் அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை இம்மியளவும் குறையாமல் இருக்கிறது. என்னை அவனாகவே உருவகித்துக்கொண்டு பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் நாட்களிலெல்லாம் நான் அடையும் பெருமிதங்களுக்கு அளவே இல்லை. உளவியல் ரீதியாக இதனை விவாதித்துக்கொண்டால் வெறுமையும், கோபமும் வரும் ஆனால் அழகியல் நோக்கில் காணும்போது எல்லாமும் மறைந்த ஏகாந்தத்தை உணரமுடியும்.
-
உதயனானு தாரம் (2005)
நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல துரோகம் பற்றிய திரைப்படங்களை –அது tragic plot என்பதால் – பெரும்பாலான கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் எடுக்க விரும்புவதில்லை அல்லது அப்படி ஒரு சம்பவம் அவர்கள் கதையில் நிகழுமென்றாலும் அதனை பற்றிய டீடெய்ல்ஸ் பற்றி பேசாது முடிவுகளை மட்டும் சொல்லிக்கொண்டு போய்விடுவார்கள்.
-
Naqaab
கடைசியாக நான் பார்த்த மிகச்சிறந்த திரில்லர் திரைப்படம் ஒரு இரட்டை இயக்குனர்களின் படம்தான். ஜேடி–ஜெர்ரி யின் விசில் அது. அதன் பிறகு வந்த எந்த ஒரு இந்திய திரில்லர் படமும் என்னை ஈர்க்கவில்லை. மீண்டும் இன்னொரு இரட்டை இயக்குனர் – அப்பாஸ்-மஸ்தான் வாயிலாக அது நிறைவேறியது சென்ற வார இறுதியில்.
-
அறைஎண்305 & வெள்ளித்திரை
தமிழ் சினிமாவின் காமெடி genre ஐ சமீபகாலத்தில் மிகவும் ஆரோக்கியமான, வித்தியாசமான பாதையில் திருப்பிய பெருமை இரண்டு இளைஞர்களை சாரும் என எண்ணுகிறேன். இந்த இரண்டு இளைஞர்களும் அறிமுகப்படுத்திய நகைச்சுவை கருத்துசொல்லாதது, கோணங்கிகளை முன் நிறுத்தாதது மற்றும் உடல் ஊனங்களையோ அல்லது தன்னினும் மெல்லினத்தோரை துன்புறுத்துவதை காட்டாதது மற்றும் இன்னபிற…
-
Konkana,Rahul and Karan
அபர்ணா சென்னின் Mr.&Mrs. Iyer ல்தான் ராஹுல்போஸ் மற்றும் கொன்கனாவின் முதல் திரை அறிமுகம் எனக்கு. மிகவும் நிறைவு தந்த அந்த திரைப்படம் மற்றும் அவர்களின் performance ன் காரணமாக தொடர்ந்து அவர்களின் திரைப்படங்களை பார்ப்பதும் வழக்கமாயிற்று.
-
பரதம் (1991)
மலையாள சினிமாவின் தனித்தன்மையே அங்கு சிறந்த எழுத்தாளர்களும், ஆகச்சிறந்த இயக்குனர்களும் இணைந்து தத்தம் பணிகளை சிறப்புற செய்வதுதான் என எண்ணுகிறேன். இந்த கூட்டு முயற்சிகளில் லோகித்தாஸும், சிபி மலையிலும் சிறந்த கூட்டணி என தயக்கமின்றி சொல்லலாம். பரதமும் அவர்களின் முயற்சியின் சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று.
-
Next
வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் த்ரில்லர்தானே! அடுத்த இரண்டு நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துவிடும்போது என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சக்திவாய்த்திருக்கிறது இந்த கதையில் நாயகனுக்கு.
-
Memoirs of a Geisha (2005)
(Geisha – A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing) இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம். தந்தை தாயின் அன்பில் உழன்று, உறவினர்களின் அன்பினில் திளைத்து , நல்ல கல்வி கற்று, நன்கு உண்டு விளையாடி இளமையின் அனைத்து பரிமாணங்களையும் அனுபவித்து வாழும் வாழ்வு ஒரு புறம். இவை அத்தனையும் இல்லாமல் வறுமையும் வெறுமையும் துரத்த போராட்டங்களையே…
-
பலே!
முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
-
Life in a Metro
இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி…
