நிஷாகந்தியின் குரல்

என் மனதுக்கு மிக நெருக்கமான “நித்திரை அழகியின் நிஷாகந்திப்பூ” நெடுங்கதைக்கு இது நாள் வரை என் குரல்தான் அடையாளம். என் குரல்வடிவில்தான் அதன் பாத்திரங்களை மனதுக்குள் பேசவிட்டு எழுதினேன். படித்தவர்களுக்கும் என் குரல்தான் அதில் பரிச்சியமாய் ஒலித்திருக்கும்.

இன்று முதல் அதற்கு என்னைவிட பன்மடங்கு சிறப்பான மற்றுமொரு அடையாளமாக திருமதி. Fathima Babu அவர்களின் குரலும் சேர்ந்திருக்கிறது. இதனை அவர்கள் வாசித்துமுடித்தபோது இந்தக்கதை வாசித்தவர்களுக்கு கிடைத்த “haunting” அனுபவம் இன்னும் சில மடங்குகள் அதிகமாக கேட்டவர்களுக்கும் கிடைத்தது.

இது 40 நிமிடங்கள் வரை போகக்கூடிய ஒரு குறுநாவல். இதனை அவர்கள் வாசிக்கக்கேட்டபோது வாசிக்க அதிக நேரம் எடுக்குமே என்ற தயக்கத்துடனேயேதான் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதனால் என்ன என்ற பெருந்தன்மையோடு எடுத்து, மிகச்சிறப்பாக வாசித்தார்கள்.

40 நிமிடங்களும் குரலில் எந்தத்தொய்வும் இன்றி, பாத்திரங்களுக்கு கனகச்சிதமான குரல் கொடுத்து, உணர்வுகளை சற்றும் பிசகாமல் நிலை நிறுத்தி ஒரு பேரற்புதமென இதனை நிகழ்த்தினார்கள்.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.கீழ்க்கண்ட இணைப்படைச்சொடுக்கி கதை கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=ezW8UwsVyjY

கதையை இங்கு படிக்கலாம்

https://kundahmusicseries.wordpress.com/2014/11/15/nishagandhi/