ஒவ்வொரு வருடமும் தவறாது மேலெழுந்து வருகிறது இப்புகைப்படம். பால்யத்தின் மகிழ்வு மிகு இத்தருணத்தைப்பற்றி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆயினும் என்றும் தீரா மகிழ்வையும், குதூகலத்தையும், எல்லா அரும்பெருஞ்செயல்களை விடவும் வாழ்வில் இத்தருணம் விஞ்சி நிற்பதையும் நினைந்து நினைந்து மகிழவும், வியக்கவும் நேரமும் வார்த்தைகளும் இருந்துகொண்டே இருக்கிறது.
அதோ அந்த தூரமலை, அந்தப்புல்வெளி, கூடாரம், அங்கே கூடி நிற்கும் என் பள்ளித்தோழர், தோழியர், அண்மைப்பூங்கா, அந்தச்சாலை இன்னும் எல்லாமும் அப்படியே அங்கே இருக்கின்றன என்னைப்போலவே இந்தத்தருணத்தைப்பார்த்து மகிழ்ந்த மெளனசாட்சியென. இத்திரு நாளில் 30 வருடங்களுக்கு முன்பு அங்கிருந்தேன். இன்னும் அங்கேயே இருக்கிறேன் நினைவுகள் வழி.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.


Leave a comment